close
Choose your channels

18 மாதமாக பாலியல் வன்கொடுமை செய்தார்… பிரபல பாடகர் மீது குற்றச்சாட்டிய இளம்பெண்!

Saturday, May 13, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல அமெரிக்க இசைக்கலைஞரும் பாடகருமான ஜிம்மி ஆலன் தன்னை 18 மாதமாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தார் என்று அவருடைய முன்னாள் மேலாளர் புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அமெரிக்காவின் கிராமிய இசைக்கலைஞரும் பாடகருமான ஜிம்மி ஆலன் ‘எ லைஃப் இன் எ ஹைவே‘, ‘அமெரிக்கன் ஐடல் எபிசோட்’ போன்ற இசை ஆல்பத்திற்காக ரசிகர்களிடையே பிரபலமானார். இந்நிலையில் அவருடைய முன்னாள் மேலாளர் ஜேன் டோ என்பவர் தன்னை கடந்த 2021 முதல் 18 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்துவருகிறார்.

முதன் முதலாக 2021 மார்ச் மாதத்தின் போது அமெரிக்கன் ஐடல் எபிசோட் இசை ஆல்பம் படமாக்கப்பட்டது. அந்தத் தருணத்தில் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினார். தொடர்ந்து பொதுஇடங்களிலும், பிரபல உணவங்களிலும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய அவர் ஒரு முறை மதுவைக் கொடுத்து ஹோட்டலில் பாலியல் வன்கொடுமை செய்தார். காலையில் எழுந்தபோது எனது பிறப்புறுப்பில் இரத்தப்போக்கு ஏற்பட்டது. கூடவே ஜிம்மி ஆலன் கருத்தடை மாத்திரை உட்கொள்ளுமாறு வலியுறுத்தினார் என்று பாடகர் ஜிம்மி ஆலன் மீது ஜேன் டோ குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து ஜிம்மி ஆலனின் மனைவி அலெக்சிங் கோலே அவரைவிட்டு பிரிந்து தற்போது விவாகாரத்து கோரி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜேன் டோ கூறியுள்ள புகார் தொடர்பாக வழக்கு பதிவுசெய்யப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.