close
Choose your channels

பயில்வான் ரங்கநாதன் பின்னணியில் தனுஷ்? பாடகி சுசித்ரா போலீஸ் புகார்

Friday, June 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் கடந்த சில ஆண்டுகளாக தனது யூடியூப் சேனலில் நடிகர், நடிகைகள் குறித்த அந்தரங்க விஷயங்களை கூறி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ஏற்கனவே ஒரு சில நடிகர், நடிகைகள் அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.

இந்த நிலையில் சமீபத்தில் பாடகி சுசித்ரா பயில்வான் ரங்கநாதனுடன் வாக்குவாதம் செய்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது தன்னை பற்றி அவதூறு கருத்துக்களை தொடர்ந்து கூறிவரும் பயில்வான் ரங்கநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாடகி சுசித்ரா புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் கடந்த மார்ச் மாதம் தனியார் யூடியூப் சேனலில் பயில்வான் ரங்கநாதன் தன்னைப் பற்றி அவதூறாக பேசியதாகவும், போதை பழக்கத்திற்கு அடிமையானவர் மற்றும் பாலியல் ஆர்வம் உள்ளவர் என்ற பொய்யான குற்றச்சாட்டுகளை தன்மீது பயில்வான் ரங்கநாதன் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக தன்னை பற்றி அவதூறான கருத்துக்களை தொடர்ந்து பயில்வான் ரங்கநாதன் பரப்பி வருவதாகவும், அவர் தன்னைப் பற்றி அவதூறு கருத்துக்கள் பரப்பியதால் சினிமா துறையில் தனக்கு பாடுவதற்கு வாய்ப்புக் குறைந்து விட்டதாகவும் கூறியுள்ளார். தன்னுடைய வருமானம் தற்போது ஜீரோவில் இருப்பதற்கு பயில்வான் ரங்கநாதன் தான் காரணம் என்றும், கடந்த 2017 ஆம் ஆண்டிற்குப் பிறகு தனது ஐடி ரிட்டர்ன் தாக்கல் செய்ததை பார்த்தாலே இது தெரியும் என்றும் தனது புகார் மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு தன்னுடைய ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு சுசிலீக்ஸ் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அது குறித்து தான் புகார் அளித்ததாகவும், அந்தப் புகார் தொடர்பான போலீஸ் விசாரணையில் நடிகர் தனுஷ், இயக்குனர் வெங்கட் பிரபு, கார்த்திக் குமார் உள்பட ஒரு சிலர் மீது சந்தேகம் இருப்பதாக தான் தெரிவித்ததாகவும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் தற்போது பயில்வான் ரங்கநாதன் பின்னணியிலும் அதே நபர்கள் இருக்கலாம் என்ற சந்தேகம் தனக்கு இருப்பதாகவும் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகார் மீது காவல்துறையினர் விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.