close
Choose your channels

டிக்டாக் வீடியோவில் அக்கா-தங்கையின் நிர்வாண படங்கள்: 12ஆம் வகுப்பு மாணவன் கைது

Friday, November 15, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உத்தரபிரதேச மாநிலத்தில் அக்கா, தங்கை என இரண்டு பெண்களின் புகைப்படங்களை நிர்வாணமாக சித்தரித்து டிக்டாக் வீடியோவாக பதிவு செய்த 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உபி மாநிலத்தை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் சமீபத்தில் ஒரு திருமண வீட்டிற்கு சென்றபோது அங்கு அக்கா தங்கை இருவர் அழகாக இருப்பதை பார்த்துள்ளார். உடனே தனது செல்போனில் இருவரையும் புகைப்படம் எடுத்த மாணவர், வீட்டிற்கு வந்து ஃபோட்டோஷாப் மூலம் அந்த இரு சகோதரிகளின் புகைப்படங்களை நிர்வாணமாக மாற்றி, அதனை வீடியோவாக டிக்டாக்கில் பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோ வைரலாகிய நிலையில் இதனையறிந்த சகோதரிகள் அதிர்ச்சி அடைந்து உடனே காவல்துறையினர்களிடம் புகார் அளித்தனர். இந்த புகாரினை விசாரித்த காவல்துறையினர் இதற்கு காரணமான 12ஆம் வகுப்பு மாணவரை கைது செய்து விசாரணை செய்தபோது தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும் அக்கா-தங்கையின் புகைப்படங்களை ஆபாசமாக்கி டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களிலும் பதிவு செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து மாணவனை கைது செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos