சிவகார்த்திகேயன் - நயன்தாரா படம் குறித்த முக்கிய தகவல்

  • IndiaGlitz, [Wednesday,October 31 2018]

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் 'சீமராஜா' படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது சிவகார்த்திகேயன், இயக்குனர் ராஜேஷ் எம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்ற நிலையில் இன்றுடன் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நவம்பர் இரண்டாம் வாரத்தில் தொடங்கும் என தெரிகிறது.

'வேலைக்காரன்' படத்திற்கு பின்னர் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா இணைந்துள்ள இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. 'ஜித்து ஜில்லாடி' என்ற டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் இந்த படத்தில் ராதிகா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை அடுத்து சிவகார்த்திகேயன், 'இன்று நேற்று நாளை' பட இயக்குனர் ரவிகுமார் இயக்கும் ஒரு விஞ்ஞான படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் நாயகியாக ரகுல் ப்ரித்திசிங் நடிக்கவுள்ளார்.

More News

செருப்பால் அடித்து கொண்ட இரண்டு மனைவிகள்: தலைமறைவான பிரபல நடிகர்

பிரபல கன்னட நடிகர் ஒருவரின் இரண்டு மனைவிகள் ஒருவருக்கொருவர் செருப்பால் அடித்து கொண்டு தாக்கிய நிலையில் அந்த நடிகர் திடீரென தலைமறைவாகியுள்ளார்.

நடிகர் ஆனந்த்ராஜூக்கு ஏற்பட்ட பேரிழப்பு

தமிழ் சினிமாவின் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகரான ஆனந்த்ராஜின் தாயார் ராஜாமணி புதுச்சேரியில் நேற்று காலமானார். அவருக்கு வயது 75. 

சர்தார் பட்டேல் சிலை: ரூ.3000 கோடி வீணா?

உலகின் மிக உயர்ந்த சிலையான சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை குஜராத்தில் இன்று பாரத பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார்.

மாரி 2: முக்கிய பணியை முடித்த வில்லன் டொவினோ தாமஸ்

தனுஷ், சாய்பல்லவி, வரலட்சுமி நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த சில மாதங்களாக 'மாரி 2' படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து

தீபாவளி அன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

பட்டாசு குறித்த வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம் தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.