close
Choose your channels

சிவகார்த்திகேயன் - நயன்தாரா படம் குறித்த முக்கிய தகவல்

Wednesday, October 31, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் 'சீமராஜா' படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது சிவகார்த்திகேயன், இயக்குனர் ராஜேஷ் எம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்ற நிலையில் இன்றுடன் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நவம்பர் இரண்டாம் வாரத்தில் தொடங்கும் என தெரிகிறது.

'வேலைக்காரன்' படத்திற்கு பின்னர் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா இணைந்துள்ள இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. 'ஜித்து ஜில்லாடி' என்ற டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் இந்த படத்தில் ராதிகா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை அடுத்து சிவகார்த்திகேயன், 'இன்று நேற்று நாளை' பட இயக்குனர் ரவிகுமார் இயக்கும் ஒரு விஞ்ஞான படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் நாயகியாக ரகுல் ப்ரித்திசிங் நடிக்கவுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.