சிவகார்த்திகேயன் அடுத்த படத்தில் நாயகியாகும் உக்ரைன் நடிகை!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
சிவகார்த்திகேயன் நடித்து வரும் 20வது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி உள்ள நிலையில் இந்த படத்தின் நாயகி குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.
எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தில் நடித்த ஒலிவியா மோரிஸ் இந்த படத்தின் நாயகி என்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் நாயகியாக மரியா போஷாப்கா என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் ஏற்கனவே ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான ’ஸ்பெஷல் ஓபிஎஸ் 1.5’ என்ற தொடரில் நடாஷா என்ற கேரக்டரில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
’எஸ்.கே.20’ படத்தின் நாயகி ஒரு வெளிநாட்டு நடிகைதான் என்று ஏற்கனவே செய்தி வெளிவந்த நிலையில் தற்போது உக்ரைன் நாட்டின் மரியா போஷாப்கா ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாகவும், இதுகுறித்த முறையான அறிவிப்பை விரைவில் படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
அனுதீப் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் பிரமாண்டமாக இந்த படத்தை சுரேஷ் புரடொக்சன்ஸ் சார்பில் திரு.சுரேஷ் பாபு தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கு தமன் இசையமைக்கின்றார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments