close
Choose your channels

ஓட்காவை ஒரே மடக்கில் குடித்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

Saturday, February 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அமெரிக்காவில் 19 வயது இளைஞர் ஒருவர் தன்னுடைய நண்பர்களின் வற்புறுத்தலைக் கேட்டு ஒரே மடக்கில் ஓட்காவை காலி செய்திருக்கிறார். இதனால் மூளைப் பாதிப்பு ஏற்பட்டு தவித்துவருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மினியா போலீஸ் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் டேனியல் சான்டுல்லி. இவர் கடந்த அக்டோபர் மாதம் மிசோரி பல்கலைக்கழகத்தின் விடுதியில் சேருவதற்காக அங்கு சென்றுள்ளார். அப்போது அவருடைய நண்பர்கள் சிலர் ஓட்காவை கொடுத்து உன்னால் ஒரே மடக்கில் குடிக்க முடியுமா? என்று சவால் விட்டுள்ளனர். இதைக் கேட்ட டேனியல் ஒரே மடக்கில் அதைக் குடித்து சவாலில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

ஆனால் ஓட்காவை குடித்த டேனியலுக்கு அவருடைய ரத்தத்தில் 6 மடங்கு ஆல்கஹால் ஒரே நேரத்தில் அதிகரித்ததாகவும் இதனால் அவருடைய மூளையில் பாதிப்பு ஏற்பட்டு தற்போது செயலிழக்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் டேனியலுக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் பல மாதங்களாக அவர் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த வழக்கு விசாரணை தற்போது நடைபெற்று வரும் நிலையில் டேனியலின் நிலைமை பார்த்து பொதுமக்கள் பலரும் அதிர்ச்சியை வெளியிட்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.