close
Choose your channels

திரைக்கு வரும் முன்பே சர்வதேச அங்கீகாரத்தை பெற்ற சிவகார்த்திகேயன் படம்..!

Saturday, February 10, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகி வரும் ’கொட்டுக்காளி’ என்ற திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீசாக இருக்கும் நிலையில் ரிலீசுக்கு முன்பே இந்த படம் சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகராக இருந்த சூரி தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் அவர் ஹீரோவாக நடித்த ’விடுதலை’ படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது அவர் ’கொட்டுக்காளி’ ’கருடன்’ உள்ளிட்ட சில படங்களில் நாயகனாக நடித்து வருகிறார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன், நயன்தாரா தயாரிப்பில் உருவான ’பிப்பிள்ஸ்’ என்ற திரைப்படத்தை இயக்கிய பிஎஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’கொட்டுக்காளி’.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது இந்த படம் வரும் 16ஆம் தேதி பெர்லினில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள நிலையில் இந்த படத்தின் குழுவினர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

சூரி நாயகனாகவும், நாயகியாகவும் இந்த படத்தில் அன்னாபென் நடித்துள்ளனர். நடிகை அன்னாபென் மலையாள திரை உலகில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பாக சூப்பர் ஹிட் ஆன ’ஹெலன்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.