close
Choose your channels

சிங்கம்பட்டி ராஜாவுக்கு சீமராஜா சிவகார்த்திகேயன் இரங்கல்

Monday, May 25, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுதந்திர இந்தியாவில் பட்டம் கட்டிய கடைசி மன்னர் நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி அவர்கள் நேற்று காலமானார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இவருடைய மறைவால் சிங்கம்பட்டி பகுதியே சோகமயமாகியுள்ளது.

இந்த நிலையில் சிங்கம்பட்டி ஜமீந்தார் முருகதாஸ் தீர்த்தபதி அவர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா என்பதும், பிளாஷ்பேக் காட்சியில் சீமராஜா கேரக்டரில் சிவகார்த்திகேயன் கம்பீரமாக நடித்திருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சிங்கம்பட்டி ஜமீன் மறைவிற்கு நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியபோது, ‘சிங்கம்பட்டி சீமராஜாவாக நடித்ததற்கு எப்போதும் பெருமை கொள்வேன் அய்யா! அய்யாவின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும்,சிங்கம்பட்டி மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்’என்று கூறியுள்ளார். மேலும் ‘சீமராஜா’ படப்பிடிப்பின்போது சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி அவர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் அவர் பதிவு செய்தூள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.