close
Choose your channels

சிவகார்த்திகேயனை ஓட்டு போட அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை!

Tuesday, April 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தால் மட்டும் போதாது. ஒருவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்தால் மட்டுமே அவர் வாக்களிக்க முடியும்.

அந்த வகையில் கடந்த 18ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற்றபோது வாக்காளர் பட்டியலில் நடிகர் சிவகார்த்திகேயனின் பெயர் இல்லாததால் அவர் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை. ஆனால் தேர்தல் அதிகாரியுடன் சிவகார்த்திகேயன் வாக்குவாதம் செய்ததை அடுத்து பின்னர் அவரை வாக்களிக்க தேர்தல் அதிகாரி அனுமதித்தார்

இந்த விவகாரம் பெரும் பரபரப்பாகியது. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத பலர் வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டபோது அவர்கள் சிவகார்த்திகேயனை உதாரணமாக கூறி வாக்குவாதம் செய்து வந்தனர்

இந்த நிலையில் இன்று இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, 'நடிகர் சிவகார்த்திகேயனை வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் வாக்கு போட அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.