close
Choose your channels

காமக்கொடூரன் சிவசங்கர் பாபா மருத்துவமனையில் அனுமதி....!

Friday, June 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திடீர் உடல்நலக்குறைப்பாடு காரணமாக சிவசங்கர் பாபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

சென்னை, கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளியை, காவல் துறையினர் சோதனை செய்தனர். அங்குள்ள சிசிடிவி கேமராக்களின் ஹார்டுடிஸ்க்குகளை பறிமுதல் செய்து, பாபா-வின் அறைக்கு சீல் வைத்தனர் சிபிசிஐடி அதிகாரிகள். சிவசங்கரின் சேவகிகளான பள்ளி ஆசிரியைகள் அண்மையில், பாபா நல்லவர், பள்ளியில் எந்த தவறும் நடக்கவில்லை, மாணவிகளுக்கு பாலியல் சீண்டல்கள் நடக்கவில்லை என செய்தியாளர்களிடம் கூறியிருந்தனர். இதைத்தொடர்ந்து கருணா, நீரஜ், சுஷ்மிதா உள்ளிட்ட ஆசிரியைகளிடம், காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சிவசங்கர் பாபாவுக்கு, இன்று திடீரென உடல்நலக்குறைபாடு ஏற்பட அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.