close
Choose your channels

3 தனித்தனி புகார்கள் எதிரொலி: சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு!

Sunday, June 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை அருகே சர்வதேச பள்ளி ஒன்றை நடத்தி வரும் சிவசங்கர் பாபா மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் தற்போது அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சென்னை அருகே சுஷில்ஹரி சர்வதேச பள்ளியில் பள்ளியை நடத்தி வருபவர் சிவசங்கர் பாபா. இவர் மீது அப்பள்ளியில் கல்வி பயின்று வரும் மாணவிகள் சிலர் பாலியல் குற்றச்சாட்டு கூறியதை அடுத்து மூன்று தனித்தனி புகார்கள் காவல் துறையில் பதிவு செய்யப்பட்டது. இந்த புகார்களின் அடிப்படையில் தற்போது சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தில் கீழ் கேளம்பாக்கம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாணவிகள் புகாரின் அடிப்படையில் நேரில் ஆஜராக வேண்டும் என சிவசங்கர் பாபாவுக்கு குழந்தைகள் உரிமைகள் நல ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் சிவசங்கர் பாபா நெஞ்சுவலியால் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக கூறி சிவசங்கர் பாபாவுக்கு பதில் வேறொருவர் குழந்தைகள் நல உரிமைகள் ஆணையத்தில் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதால் அவர் கைது செய்யப்பட்ட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.