close
Choose your channels

இது 15 வருட ஒற்றுமை.. இன்னும் தொடரும்: சினேகாவின் காதலர் தின க்யூட் புகைப்படங்கள்..!

Tuesday, February 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் காதலித்து திருமணம் செய்து கொண்ட தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளில் ஒன்றான பிரசன்னா மற்றும் சினேகா ஜோடி தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

சினேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’இது 15 வருட ஒற்றுமை, இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது’ என்று கூறி காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நடிகர் பிரசன்னா காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்து, ‘சினேகா என்னுடையவர் மட்டுமல்ல, அவர் என் வீடு, என் இதயம், என் ஆன்மா, என் கூடு மற்றும் அனைத்தும் அவர்தான் என்று தெரிவித்துள்ளார், மேலும் இருவருமே காதலர் தின ஸ்பெஷல் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகிறது

சினேகா - பிரசன்னா ஜோடி கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர் இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான ‘கிறிஸ்டோபர்’ என்ற படத்தில் சினேகா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பதும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் நடிகர் பிரசன்னா தற்போது ’துப்பறிவாளன் 2’, ‘கிங் ஆஃப் கோதா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.