close
Choose your channels

'மாநாடு' திரைப்படத்தின் தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் இணைந்த சூரி!

Tuesday, February 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளியான சிம்புவின் ’மாநாடு’ படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து சூப்பர் ஹிட் வெற்றி படமாக்கிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது அவர் ராம் இயக்கத்தில் நிவின்பாலி மற்றும் அஞ்சலி இணைந்து நடிக்கும் திரைப்படம் ஒன்றை தயாரித்து வருகிறார் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்திற்காக தனியார் ஸ்டுடியோ ஒன்றில் ரயில் செட் ஒன்று போடப்பட்டு அதில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்த படத்தில் சமீபத்தில் சூரி இணைந்துள்ளதாகவும், சூரி மற்றும் நிவின்பாலி இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின் இடையே திடீரென இயக்குனர் மிஷ்கின் விசிட் செய்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் முடிவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.