'பங்கு' பக்கத்தில் நான் இல்லாமல் போய்விட்டேனே! 'கனா' படம் குறித்து சூரி

  • IndiaGlitz, [Saturday,December 22 2018]

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து தயாரித்த 'கனா' திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற்று வருகிறது. இயக்குனர் அருண்ராஜா காமராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் ஆகியோர்களுக்கு பாராட்டு மழை குவிந்து வரும் நிலையில் கிறிஸ்துமஸ் போட்டி படங்களில் இந்த படம் முதலிடத்தை பிடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த படத்தில் 'பங்கு' சிவகார்த்திகேயனுடன் தான் ஒருசில காட்சிகளில் நடித்திருந்தால் தனக்கு மனநிறைவை தந்திருக்கும் என்று நடிகர் சூரி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:

விவசாய வலியை உலகுக்கு உரக்க சொன்ன 'கனா' படத்தில் அணில் அளவு பங்களிப்பையாவது பங்கு சிவகார்த்திகேயன் பக்கத்தில் நின்று நான் செய்திருந்தால் எனக்கு பெரிய மன நிறைவாக இருந்திருக்கும். பட குழுவை வாழ்த்துகிறேன், வணங்குகிறேன்! தமிழ் மக்கள் தங்கத்தட்டில் வைத்து தாங்க வேண்டிய படம் கனா' என்று பதிவு செய்துள்ளார்.

 

More News

இளையராஜா மீது தயாரிப்பாளர்கள் வழக்கு

தனது பாடல்களை பொது நிகழ்ச்சிகளில், மேடைகளில் பாடுபவர்கள் தனக்கு ராயல்டி தரவேண்டும் என்று இளையராஜா கூறி வருவது தெரிந்ததே.

'தளபதி 63' இயக்குனர் அட்லியை சந்தித்த 'பேட்ட' டெக்னீஷியன்

ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படத்தின் புரடொக்சன் டிசைனராக பணிபுரிந்த சுரேஷ் செல்வராஜன், நீண்ட இடைவெளிக்கு பின் தனது நெருங்கிய நண்பரும் 'தளபதி 63' பட இயக்குனருமான அட்லியை சந்தித்துள்ளார்.

ரஜினிகாந்த் தொடங்கவிருக்கும் டிவியின் பெயர் என்ன?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி அதிகாரபூர்வமாக அறிவித்தார்...

கஜா புயல் எதிரொலி: கடனை தள்ளுபடி செய்த டீக்கடைக்காரர்

இந்த நிலையில் கஜா புயல் பாதித்த பகுதிகளில் ஒன்றில் டீக்கடை வைத்திருக்கும் ஒருவர் தன்னுடைய கடையில் வாடிக்கையாளர்கள்...

இன்று அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்! ஏன் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று இரவு தனது குடும்பத்துடன் அமெரிக்கா செல்லவிருப்பதாகவும்,