என் கடைசி பாடலையும் எஸ்பிபி தான் பாட வேண்டும்: வைரமுத்து உருக்கம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் விரைவில் குணமாகி வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்யாதவர்களே இல்லை என்று கூறலாம். கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதை தனது குரலால் கொள்ளை கொண்ட எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் மீண்டும் உடல்நிலை தேறி பாட வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.

இந்த நிலையில் எஸ்பிபி அவர்களின் மிகவும் நெருக்கமான நண்பர்களில் ஒருவரான கவியரசு வைரமுத்து அவர்கள் ஏற்கனவே எஸ்பிபி அவர்கள் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்று தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் எஸ்பிபி குறித்து வைரமுத்து கூறியபோது, ‘40 ஆண்டுகளாக மாறாத மகா கலைஞர் எஸ்பிபி என்றும் தனது முதல் பாடலை பாடியவர் எஸ்பி பாலசுப்ரமணியம் தான் என்றும், எனது கடைசி பாடலையும் அவர்தான் பாட வேண்டும் என்று வைரமுத்து குறிப்பிட்டு உள்ளார். மேலும் இந்த உலகிற்கு இன்பம் மட்டுமே கொடுத்தவர் எஸ்பிபி என்றும் வைரமுத்து அவருக்கு புகழாராம் சூட்டியுள்ளார்.

வைரமுத்து எழுதிய முதல் பாடலான ‘பொன்மாலை பொழுது’ என்ற பாடலை எஸ்பிபி தான் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

எஸ்பிபி உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்: மருத்துவமனையின் அறிக்கையால் அதிர்ச்சி!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும்

எஸ்பிபி உடல்நிலை குறித்து சற்றுமுன் எஸ்பிபி சரண் வெளியிட்ட வீடியோ!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

மருத்துவத் துறையில் முன்னோடியாக விளங்கும் தமிழகம்!!! முதல்வரின் அதிரடி நடவடிக்கைகள்!!!

தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகள் மத்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ரஜினியும், கமலும் எங்கள் அணியில் இணைந்தால் வரவேற்போம்: பிரபல அரசியல் கட்சி தலைவர்

உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் ஏற்கனவே அரசியல் கட்சியைத் தொடங்கி கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறார். அவர் ஒரு பாராளுமன்ற தேர்தலையும் சந்தித்து விட்டார்

மனிதத் தலையைச் சுட்டு சாப்பிட்ட இளைஞர்– திடுக்கிட வைக்கும் பகீர் தகவல்!!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் உள்ள ரெல்லி பகுதியில் வசிக்கும் சுப்பிரமணியம் என்பவர் தன்னுடைய வீட்டின் அருகில் ஒரு கோணிப்பை இருப்பதை கவனித்து இருக்கிறார்.