'சர்கார்' படத்தில் ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன்: டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர்

  • IndiaGlitz, [Saturday,October 13 2018]

விஜய் நடிக்கும் 'சர்கார்' படத்தின் ஒரு பாடலில் சர்ப்ரைஸ் வைத்திருப்பதாக இந்த படத்தின் பாடல் ஒன்றுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்துள்ள ஸ்ரீதர் மாஸ்டர் கூறியுள்ளார்.

விஜய் நடனம் ஆடும் பாடல் என்றாலே அந்த பாடலில் ஒரு சர்ப்ரைஸ் வைப்பது என்னுடைய வழக்கம். அதேபோல் இந்த படத்தின் ஒரு பாடலிலும் ஒரு சர்ப்ரைஸ் வைத்துள்ளேன். நிச்சயம் அந்த சர்ப்ரைஸ் ரசிகர்களை குஷிப்படுத்தும்

மேலும் எவ்வளவு நீளமான ஸ்டெப்ஸ் வைத்தாலும் விஜய் அதை ஒரே டேக்கில் முடித்து கொள்வார். பல்லவி முழுவதையும் ஒரே டேக்கில் ஆடுவது என்பது விஜய்யை தவிர யாராலும் முடியாத ஒன்று.

அதேபோல் இந்த படத்தின் ஒரு பாடலில் ஒரு சின்ன மாற்றம் செய்ய வேண்டும் என்று ஏ.ஆர்.ரஹ்மானிடம் கூறியபோது அவர் தான் ஒரு பெரிய இசையமைப்பாளர் என்ற ஈகோ இல்லாமல் நான் நினைத்தபடி மாற்றி கொடுத்தார். இந்த படத்தின் பாடலுக்காக நானும் எனது டீமும் கடுமையாக உழைத்திருக்கின்றோம். இவை அனைத்தும் விஜய் ரசிகர்களை திருப்தி செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கம் தான் என்று டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.

More News

'ஜீனியஸ்' சென்சார் தகவல் மற்றும் ஆச்சரியமான ரன்னிங் டைம்

பிரபல இயக்குனர் சுசீந்திரன் இயகக்த்தில் உருவாகியுள்ள 'ஜீனியஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது.

சர்வதேச கவனத்தை பெறும் 'ராட்சசன்'

விஷ்ணு, அமலாபால் நடிப்பில் இயக்குனர் ராம்குமார் இயக்கிய 'ராட்சசன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

இணையத்தில் வைரலாகும் ரஜினி-த்ரிஷா புகைப்படங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் 'பேட்ட' படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் சமீபத்தில் ரஜினிகாந்த் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்ற புகைப்படங்கள் வைரலானது.

விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு? எஸ்.ஏ.சந்திரசேகர் கேள்வி

தமிழக அரசியலில் ஆளுமை நிறைந்த தலைவர்களாக இருந்த முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர்களின் மறைவிற்கு பின்னர் பல நடிகர்கள் அரசியலுக்கு வரும் ஆசையுடன் செயல்பட்டு வருகின்றனர்.

ஆண்டாளை சின்மயி வடிவத்தில் பார்க்கின்றேன்: தமிழிசை

கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி சுமத்திய பாலியல் குற்றச்சாட்டை ஒரு பெண்ணுக்கு நேர்ந்த சம்பவமாக பார்க்காமல் இந்த விஷயமும் அரசியல் ஆக்கப்பட்டு வருகிறது.