close
Choose your channels

இணையத்தில் வைரலாகும் ரஜினி-த்ரிஷா புகைப்படங்கள்

Saturday, October 13, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் 'பேட்ட' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் சமீபத்தில் ரஜினிகாந்த் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்ற புகைப்படங்கள் வைரலானது. அதேபோல் த்ரிஷாவும் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்றதாகவும் இணையதளங்களில் புகைப்படங்கள் வெளியானது

இந்த நிலையில் இன்று ரஜினியும், த்ரிஷாவும் 'பேட்ட' படத்தின் படப்பிடிப்பின் இடையே கிடைத்த இடைவெளியில் கோவில் ஒன்றுக்கு சென்று சுவாமி வழிபாடு செய்தனர். கோவில் நிர்வாகிகள் ரஜினிக்கும் த்ரிஷாவுக்கும் மாலை மற்றும் பொன்னாடை மரியாதை அளித்தனர். இதுகுறித்த புகைப்படங்கள் கடந்த சில நிமிடங்களாக இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து த்ரிஷா தனது சமூக வலைத்தளத்தில், 'கடவுள் போன்ற ஒரு மனிதருடன் இணைந்து கடவுளை வழிபட்டேன்' என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.