close
Choose your channels

தமிழக பொறுக்கிகளை டார்கெட் செய்யும் ஐ.எஸ் தீவிரவாதிகள். மீண்டும் சு.சுவாமியின் சர்ச்சை

Wednesday, February 22, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தமிழர்களை பொறுக்கி என்று கூறுவது உள்பட அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இன்று மீண்டும் தனது சமூக வலைத்தளத்தில் தமிழர்கள் குறித்த சர்ச்சை கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான், ராஜஸ்தான் எல்லை வழியாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தீவிரவாதிகள் 6 பேர் சென்னைக்குள் நுழைந்துள்ளதாகவும், அவர்கள் தமிழக பொறுக்கிகளை குறிவைத்து சென்னைக்குள் நுழைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

6 ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு தீவிரவாதிகள் சென்னைக்குள் நுழைந்துள்ளனர் என்பதோடு அவர் நிறுத்தியிருக்கலாம், ஆனால் தமிழக பொறுக்கிகளை அவர்கள் குறிவைத்துள்ளதாக கூறியது தமிழர்களை கொதித்தெழ செய்துள்ளது. குறிப்பாக இளைஞர்கள் சுவாமியின் கருத்துக்கு அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

ஏற்கனவே ஜல்லிக்கட்டு, சசிகலா, கமல்ஹாசன் குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய பதிவுகளை பதிவு செய்துள்ள சுப்பிரமணியன் சுவாமிக்கு தமிழர்கள் விரைவில் தக்க பாடம் கற்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.