சுசித்ரா முன்னாள் கணவர் கார்த்திக் குமார் காவல் நிலையத்தில் புகார்.. என்ன காரணம்?


Send us your feedback to audioarticles@vaarta.com


பாடகி சுசித்ரா சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேட்டி அளித்ததார் என்பதும், அந்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவரது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாடகி சுசித்ராவின் பேட்டியை தொடர்ந்து சமூக வலைதளத்தில் வைரலான ஒரு ஆடியோவில் கார்த்திக் குமார், சுசித்ராவிடம் பேசுவது போன்ற ஒரு ஆடியோ வெளியானது. அந்த ஆடியோவில் அவர் பட்டியலின பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வைரலாகி வரும் ஆடியோவில் உள்ளது தன்னுடைய குரல் இல்லை என்று ஏற்கனவே கார்த்திக் குமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்து இருந்தார். இருப்பினும் அந்த ஆடியோ குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்த நிலையில் தற்போது இது குறித்து மயிலாப்பூர் துணை ஆணையரிடம் கார்த்திக் குமார் புகார் மனு அளித்துள்ளார்.
அந்த புகாரில் இணையத்தில் வைரல் ஆகி வரும் ஆடியோவில் உள்ளது தன்னுடைய குரல் அல்ல என்று தெரிவித்துள்ளார். மேலும் அதை பரப்பியது யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த புகார் மனு மீது விரைவில் காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments