close
Choose your channels

சூர்யா படம் டிராப் ஆனதால் சிவகார்த்திகேயனை அணுகினாரா பிரபல இயக்குனர்?

Saturday, May 25, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா படத்தை பிரபல இயக்குனர் இயக்க இருந்த நிலையில் திடீரென அந்த படம் டிராப் ஆனதாக கூறப்பட்ட நிலையில் அடுத்ததாக சிவகார்த்திகேயனிடம் கதை சொல்லி இருந்ததாகவும் அவரும் ஓகே சொல்லிவிட்டதால் விரைவில் இருவரும் இணையும் படம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

சூர்யா நடித்த ’சூரரை போற்று’ என்ற திரைப்படத்தை இயக்கியவர் சுதா கொங்கரா என்பதும் இந்த படம் தேசிய விருதுகளை அள்ளி குவித்தது என்பது தெரிந்தது. இந்த நிலையில் மீண்டும் சூர்யாவுடன் இணைந்து ’புறநானூறு’ என்ற படத்தை இயக்க சுதா கொங்கரா திட்டமிட்டு இருந்த நிலையில் அந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இந்த படம் திடீர் என டிராப் என்று கூறப்பட்டதை அடுத்து சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்திற்கு சென்றுவிட்டார்.இதனை அடுத்து சுதா கொங்கரா தற்போது சிவகார்த்திகேயனிடம் ஒரு கதையை கூறி இருப்பதாகவும் அவரும் ஓகே சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே சிவகார்த்திகேயன் மற்றும் சுதா கொங்கரா இணையும் படம் குறித்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் இந்த படம் சூர்யா நடிக்க இருந்த ’புறநானூறு’ கதையா அல்லது வேறு கதையா என்பது தெரியவில்லை என்றாலும் விரைவில் இது குறித்த தகவல் கசியும் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment