close
Choose your channels

தினகரனை யார் என்றே தெரியாது! முன்னுக்கு பின் முரணாக பேசும் சுகேஷ் சந்திரசேகர்

Tuesday, April 25, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயற்சித்தது குறித்த வழக்கு ஒன்றில் டிடிவி தினகரனிடம் நான்காவது நாளாக இன்று விசாரணை நடந்து வருகிறது. கடந்த வாரம் டெல்லியில் கைது செய்யப்பட்ட சுரேஷ் சந்திரசேகர் கொடுத்த வாக்குமூலத்தில் தன்னிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ரூ.1.30 கோடி பணம் டிடிவி தினகரன் கொடுத்தது என்பதை ஒப்புக்கொண்டார். இதன் அடிப்படையில்தான் டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் தினகரனுக்கும் சுகேஷ் சந்திரசேகருக்கும் இடையேயான தொலைபேசி உரையாடலுக்கான ஆதாரங்களை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பித்தனர். மேலும் டெல்லிக்கு வெளியே ஒருசில இடங்களுக்கு அழைத்து சுகேஷ் சந்திரசேகரை அழைத்து என்று விசாரணை செய்ய வேண்டும் என டெல்லி போலீசார் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தனர்.

மேலும் தன்னிடம் தினகரன் தான் பணம் கொடுத்ததாக முதலில் வாக்குமூலம் கொடுத்த சுகேஷ் பின்னர் திடீரென டிடிவி தினகரனை தமக்கு யாரென்றே தெரியாது என்று மாறுபட்ட பதில்களை தெரிவித்து வருவதாகவும் நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்தனர்

இந்த நிலையில் இன்றைய நான்காவது நாள் விசாரணைக்கு பின்னர் டெல்லி போலிசார் அதிரடி முடிவு எடுக்கலாம் என டெல்லி போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.