வெற்றி பெற்ற வெங்கையா நாயுடுவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து.

  • IndiaGlitz, [Sunday,August 06 2017]

இந்தியாவின் அடுத்த துணை குடியரசு தலைவர் யார் என்பதை முடிவு செய்யும் தேர்தல் நேற்று நடைபெற்றது. அனைத்து எம்பிக்களும் ஓட்டு போட்ட இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று மாலையே எண்ணப்பட்டு இரவு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் பாஜக கூட்டணி கட்சியின் வேட்பாளர் வெங்கையாநாயுடு 516 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இந்தியாவின் 15வது துணை குடியரசு தலைவராக பதவியேற்கவுள்ள வெங்கையா நாயுடுவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோந்த், பாரத பிரதமர் நரேந்திரமோடி, மத்திய அமைச்சர்கள், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பலர் நேரிலும் தொலைபேசியிலும் வாழ்த்து தெரிவித்தனர்
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் தனது டுவிட்டரில் வெற்றி பெற்ற வெங்கையா நாயுடுவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில், ''மதிப்பிற்குரிய வெங்கைய நாயுடுவுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். மதிப்பிற்குரிய பதவிக்கு நீங்கள் தகுதியானவர்' என்று பதிவு செய்துள்ளார்.

More News

கமல்ஹாசனின் கண்டிப்பு ஆரம்பம்: பதறும் பங்கேற்பாளர்கள்

உலக நாயகன் கமல்ஹாசன், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்ற அறிவிப்பு வந்தவுடன் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்பார்ப்பு எகிறது.

நீலிக்கண்ணீரா? நிஜக்கண்ணீரா? ஓவியா வெளியேறிய பின் நடந்தது என்ன?

பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று ஓவியா விடைபெற்றார். ஓவியா இருந்த கடைசி வினாடி வரை அவரை எப்படி வெளியேற்றுவது என்று கூட்டமாக யோசித்து கொண்டிருந்த பங்கேற்பாளர்கள் அவர் வெளியேறிய பின்னர் வருத்தப்பட்டு கண்ணீர் வடிப்பது நிஜக்கண்ணீரா அல்லது நீலிக்கண்ணீரா என்று நிகழ்ச்சியை பார்க்கும் சின்ன குழந்தைக்கு கூட தெரியும்

ஓவியா வெளியேற யார் காரணம்?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சூப்பர் பங்கேற்பாளரான ஓவியா நேற்று வெளியேறிய பின்னர் வீடே வெறிச்சென்று இருந்தது. மற்ற பங்கேற்பாளர்கள் சோகமே வடிவமாக காணப்பட்டனர்.

ஆரவ்வுக்காக காத்திருப்பேன்: வெளியேறிய ஓவியாவின் வெகுளித்தனமான பேச்சு

பிக்பாஸ் வீட்டில் இருந்து ஓவியா வெளியேறிவிட்டதாக நேற்று முன் தினம் மாலையில் இருந்தே செய்திகள் வெளியாகி கொண்டிருந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் அது உறுதியானது

ஓவியாவுக்கு கொடுக்கப்பட்ட ரகசிய டாஸ்க்? அவ்வளவும் நடிப்பா?

நேற்று மாலையில் இருந்தே பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த பேச்சுதான் எங்கு பார்த்தாலும் இருந்தது...