ஜெயம் சகோதரர்களின் படம் பார்த்த சூர்யா சகோதரர்கள்

  • IndiaGlitz, [Friday,September 18 2015]

கடந்த மாதம் 28ஆம் தேதி வெளியான ஜெயம் சகோதரர்களின் 'தனி ஒருவன்' திரைப்படம் நான்காவது வாரமாக திரையரங்குகளில் ஓடி மாபெரும் வெற்றியை பெற்று வருகிறது. சமீபத்தில் ரிலீசான திரைப்படங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினர்களும் பார்த்து ஜெயம் சகோதரர்களுக்கு தங்கள் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜெயம் சகோதரர்களின் இந்த படத்தை சூர்யா சகோதரர்கள் நேற்று பார்த்துள்ளனர். இந்த படம் குறித்து சூர்யாவின் சகோதரர் கார்த்தி தனது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்தபோது, 'இந்த படத்தை பார்க்கும் முன்னர், படம் குறித்து ஏகப்பட்ட விஷயங்களை நாங்கள் கேள்விப்பட்டோம். ஆனால் படம் பார்த்த பின்னர் நாங்கள் கேள்விப்பட்டதைவிட பல மடங்காக படம் இருந்தது என்பது புரிந்து கொண்டோம்' என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் கடந்த மூன்று வாரங்களில் தனி ஒருவன்' படத்தின் வசூல் ரூ.50 கோடியை தாண்டிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சென்னையில் மட்டும் இந்த படம் ரூ.5 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

More News

பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த ஆண்டு மே மாதம் பிரபல சமூக வலைத்தளம் ஒன்றில் இணைந்தார். அவருடைய சமூக வலைத்தளத்தை 2.28 மில்லியன் பேர் ஃபாலோ செய்கின்றனர்....

விக்ரமை இயக்குவது எப்போது? ஏ.ஆர்.முருகதாஸ் பதில்

'ஐ' படத்தை அடுத்து விக்ரம் நடித்து வரும் '10 எண்றதுக்குள்ள' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது...

ஒரே நாளில் 8 காட்சிகளா? புலியின் அடுத்த சாதனை

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் 'யூ' சர்டிபிகேட் பெற்று வரும் அக்டோபர் 1ஆம் தேதி ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில் இன்று ரிலீஸ் தேதியுடன் முன்னணி பத்திரிகையில் விளம்பரமும் வெளிவந்துள்ளது.....

கமலிடம் மன்னிப்பு கேட்டது ஏன்? ராஜேஷ் எம்.செல்வா

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'தூங்காவனம்' திரைப்படத்தின் டிரைலர் நேற்று ரிலீஸாகி, கமல் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தில் பணிபுரிந்தபோது கமலுடன் ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவங்கள் குறித்து இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.....

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாவாரா தல-தளபதி நாயகி?

புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்ற பழமொழிக்கேற்ப திரையுலகில் நுழைந்த ஒருசில வருடங்களிலேயே தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நாயகியாகிவிட்டார் நடிகை ஸ்ருதிஹாசன்......