close
Choose your channels

ஜெயம் சகோதரர்களின் படம் பார்த்த சூர்யா சகோதரர்கள்

Friday, September 18, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த மாதம் 28ஆம் தேதி வெளியான ஜெயம் சகோதரர்களின் 'தனி ஒருவன்' திரைப்படம் நான்காவது வாரமாக திரையரங்குகளில் ஓடி மாபெரும் வெற்றியை பெற்று வருகிறது. சமீபத்தில் ரிலீசான திரைப்படங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினர்களும் பார்த்து ஜெயம் சகோதரர்களுக்கு தங்கள் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜெயம் சகோதரர்களின் இந்த படத்தை சூர்யா சகோதரர்கள் நேற்று பார்த்துள்ளனர். இந்த படம் குறித்து சூர்யாவின் சகோதரர் கார்த்தி தனது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்தபோது, 'இந்த படத்தை பார்க்கும் முன்னர், படம் குறித்து ஏகப்பட்ட விஷயங்களை நாங்கள் கேள்விப்பட்டோம். ஆனால் படம் பார்த்த பின்னர் நாங்கள் கேள்விப்பட்டதைவிட பல மடங்காக படம் இருந்தது என்பது புரிந்து கொண்டோம்' என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் கடந்த மூன்று வாரங்களில் தனி ஒருவன்' படத்தின் வசூல் ரூ.50 கோடியை தாண்டிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சென்னையில் மட்டும் இந்த படம் ரூ.5 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.