close
Choose your channels

ஒரே நாளில் 8 காட்சிகளா? புலியின் அடுத்த சாதனை

Friday, September 18, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் 'யூ' சர்டிபிகேட் பெற்று வரும் அக்டோபர் 1ஆம் தேதி ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில் இன்று ரிலீஸ் தேதியுடன் முன்னணி பத்திரிகையில் விளம்பரமும் வெளிவந்துள்ளது.

இளையதளபதியின் படங்கள் அனைத்தும் தமிழகத்தை போலவே கேரளாவிலும் மாபெரும் வரவேற்பை பெறும் என்பது அனைவரும் அறிவோம். இந்நிலையில் வரும் அக்டோபர் 1 மற்றும் 2 ஆகிய இருநாட்களிலும் கேரளாவில் உள்ள ஒருசில தியேட்டர்களில் 'புலி' படத்தை 8 காட்சிகள் திரையிட தியேட்டர் அதிபர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதிகாலை 12, 3.15, 6.00, காலை 9.15, பிற்பகல் 12.15, 3.30, மாலை 6.00 மற்றும் இரவு 9.30 என எட்டு காட்சிகள் திரையிட ஒருசில கேரள தியேட்டர் அதிபர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை எந்த திரைப்படமும் ஒரு நாளில் எட்டு காட்சிகள் திரையிடப்பட்டதாக வரலாறு இல்லை. ஐந்து அல்லது ஆறு காட்சிகள் மட்டுமே அதிகபட்சம் திரையிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்திலும் சென்னை உள்பட ஒருசில மாநகரங்களில் 'புலி படத்தின் அதிகாலை காட்சி திரையிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.