'சூர்யா 39' படம் குறித்த முக்கிய அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,April 22 2019]

சூர்யா நடித்து முடித்துள்ள 36வது திரைப்படமான 'என்.ஜி.கே' திரைப்படம் வரும் மே 31ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதேபோல் அவரது 37வது படமான 'காப்பான்' திரைப்படமும் ஆகஸ்ட் 30ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. அதேபோல் சூர்யாவின் 38வது படம் இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் விறுவிறுப்பாக வளர்ந்து வருகிறது.

இந்த நிலையில் சூர்யாவின் அடுத்த படமான 'சூர்யா 39' படம் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த தகவலை 'சூர்யா 39' படத்தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது. நேற்று இந்நிறுவனம் சிம்புவின் 45வது படம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில் இன்று சூர்யா 39 படம் குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

'சூர்யா 39' திரைப்படத்தை இயக்குனர் சிவா இயக்கவிருப்பதாக ஒரு செய்தி கோலிவுட்டில் பரவி வருகிறது. இந்த செய்தி உண்மையா? என்பதை இன்று மாலை ஐந்து மணி வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

நடிகர் மோகன்லாலில் அடுத்த புதிய அவதாரம்

இந்திய சினிமாவில் முக்கிய நடிகர்களின் பட்டியலில் உள்ள மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'லூசிஃபயர்' மிகப்பெரிய வெற்றி பெற்றது.

ஷங்கரின் 25வது வருடம்: பாராட்டிய பிரபல இயக்குனர்கள்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கடந்த 1993ஆம் ஆண்டு 'ஜெண்டில்மேன்' என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

என்ன ஒரு ஃபினிஷிங்: தல தோனிக்கு குவியும் பாராட்டுக்கள்

தோல்வி அடைந்த ஒரு அணியின் கேப்டனை கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடுவது அனேகமாக உலகில் இதுதான் முதல்முறையாக இருக்கும்.

7 பேர் கைது, சமூக வலைத்தளங்களுக்கு தடை: இலங்கை அரசு அதிரடி நடவடிக்கை

இலங்கையில் இன்று காலை நிகழ்ந்த தொடர் வெடிகுண்டு சம்பவத்தில் இதுவரை 200க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாகவும், 450க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து

சற்றுமுன் வந்த செய்தி: இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு

இலங்கையில் இன்று காலை மூன்று சர்ச்சுகள் மற்றும் நான்கு ஓட்டல்கள் என தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் சுமார் 160 பேர் பலியாகியுள்ள நிலையில் சற்றுமுன் மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதால்