close
Choose your channels

'சூர்யா 42' படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு: யார் யார் இருக்காங்க பாருங்க!

Sunday, August 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக இருக்கும் ’சூர்யா 42’ படம் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம். இந்நிலையில் சூர்யா 42 படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் பூஜை இன்று காலை 7 மணிக்கு சென்னையில் நடைபெற உள்ளதாகவும் இந்த பூஜையில் படக்குழுவினர் கலந்து கொள்ள இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் பணிபுரியும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி இந்த படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்க இருப்பதாகவும், வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்ய இருப்பதாகவும், அறிவிக்கப்பட்டுள்ளது. மிலன் கலை இயக்குனராகவும் சுப்ரீம் சுந்தர் ஸ்டன்ட் இயக்குனராகவும் பணியாற்ற உள்ளனர்.மேலும் இந்த படத்தின் கதையை ஆதிநாராயணன் எழுத இருப்பதாகவும் மதன் கார்க்கி வசனம் எழுதயிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. திரைக்கதை மற்றும் இயக்கம் மட்டுமே சிறுத்தை சிவா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை ஞானவேல்ராஜா, வம்சி, விக்ரம் ஆகியோர் இணைந்து தயாரிக்க உள்ளனர். இந்த படத்தின் ஆரம்ப விழா இன்று காலை 7 மணிக்கு சென்னை ராமாபுரத்தில் உள்ள அகரம் பவுண்டேஷன் என்ற இடத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சூர்யா ஜோடியாக இந்த படத்தில் திஷா பதானி நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்களின் தகவல்களும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.