close
Choose your channels

'வணங்கான் ' டிராப் ஆனதால் சூர்யா எடுத்த அதிரடி முடிவு?

Thursday, December 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி வந்த 'வணங்கான் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மட்டுமே முடிவடைந்த நிலையில் திடீரென இந்த படத்திலிருந்து சூர்யா விலகுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தில் சூர்யாவுக்கு பதிலாக அதர்வா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது ’சூர்யா 42’ என்ற படத்தில் நடித்து கொண்டிருக்கும் சூர்யா இந்த படத்தை முடித்துவிட்டு இயக்குனர் ஹரியுடன் கைகோர்க்க தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே சூர்யா மற்றும் ஹரி இணைந்து ’அருவா’ என்ற படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் திடீரென அந்தப் படம் டிராப் ஆனதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது 'வணங்கான் டிராப் ஆகியுள்ள நிலையில் மீண்டும் ’அருவா’ படத்தை தொடங்க திட்டமிட்டு இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவான ’சிங்கம்’, ‘வேல்’ உள்பட ஒருசில படங்கள் சூப்பர் ஹிட்டானதை அடுத்து மீண்டும் இந்த கூட்டணி இணைய இருப்பதாக கூறப்படுவதால் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர். 

அருவா படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் ராஷி கண்ணா இந்த படத்தின் நாயகியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் பூஜா ஹெக்டே நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos