close
Choose your channels

சிங்கம் அமைதியாக இருப்பதால் ஓநாய்கள் ஊளையிடுவதா? சூர்யா ரசிகர்களின் போஸ்டரால் பரபரப்பு..!

Saturday, December 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

‘பருத்திவீரன்’ விவகாரம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரம் குறித்து சூர்யா, கார்த்தி ஆகிய இருவருமே எந்த கருத்தும் சொல்லாமல் அமைதியாக உள்ளனர். இந்த நிலையில் அமீருக்கு ஆதரவாக பலர் தங்களது கருத்தை தெரிவித்து வரும் நிலையில் சூர்யா ரசிகர்கள் தற்போது பதிலடி கொடுக்க களத்தில் இறங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமீர் இயக்கிய ‘பருத்திவீரன்’ விவகாரம் குறித்து அமீருக்கு ஆதரவாக சமுத்திரக்கனி, சசிகுமார், கரு பழனியப்பன், சுதா கொங்காரா, சேரன், நந்தா பெரியசாமி உள்ளிட்ட ஒரு சிலர் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.

ஆனால் கார்த்தி மற்றும் சூர்யா தரப்பிலிருந்து இதுவரை யாரும் பேசவில்லை. ஆனால் அதே நேரத்தில் ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்து ஒரு அறிக்கை மட்டும் வெளியிட்டார்.

இந்த நிலையில் அமீருக்கு மேலும் ஆதரவு அதிகரித்து கொண்டே வரும் நிலையில் சூர்யா ரசிகர்கள் அதிரடியாக போஸ்டர்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். அந்த போஸ்டரில் கூறியிருப்பதாவது:

"நன்றி கெட்ட துரோகி இயக்குனர் அமீரையும், அமீரின் அல்லக்கைகளையும் வன்மையாக கண்டிக்கிறோம். கருங்காலி பழனியப்பனுக்கு நாவடக்கம் தேவை.. சிங்கம் அமைதியாக இருப்பதால் ஓநாய்கள் ஊளையிடுவதா?" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரால் இந்த பிரச்சனை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment