close
Choose your channels

படப்பிடிப்பு முடிந்ததும் சூர்யா செய்யப்போகும் செயல்: கிராம மக்கள் ஆச்சரியம்!

Tuesday, April 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’சூர்யா 41’ படப்பிடிப்பு முடிந்ததும் இந்த படப்பிடிப்பு நடைபெறும் கிராம மக்களுக்கு சூர்யா செய்யப் போகும் செயல் அந்த பகுதி மக்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

தேசிய விருது பெற்ற பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ’சூர்யா 41’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கன்னியாகுமரி அருகே நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் சில காட்சிகள் நடுக்கடலில் படமாக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இந்த படத்திற்காக குமரி அருகே உள்ள கிராமம் ஒன்றில் மூன்று வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்றும், நாளை முதல் இந்த வீடுகளில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் ’சூர்யா 41’ படப்பிடிப்பு முடிந்தவுடன் அந்த வீடுகளை அந்த பகுதியில் வீடில்லாமல் இருக்கும் மூன்று குடும்பத்தினர்களுக்கு இலவசமாக வழங்க நடிகர் சூர்யா முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.