close
Choose your channels

'எதற்கும் துணிந்தவன்' முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

Friday, March 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்த ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் சூர்யாவின் திரைப்படம் ஒன்று திரையரங்குகளில் வெளியாவதை அடுத்து அவரது ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்தனர்.

மேலும் இந்த படத்திற்கு ஒருசில கலவையான விமர்சனம் வந்தாலும் பெரும்பாலான பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்ததை அடுத்து நேற்றைய நாள் முழுவதும் திரையரங்குகளில் பார்வையாளர்களின் கூட்டம் அதிகம் இருந்ததாக கூறப்படுகிறது .

இந்த நிலையில் ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 15 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாக டிரேடிங் வட்டாரங்கள் கூறுகின்றன. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட்டில் பாதிக்கும் மேல் முதல் நாள் வசூலிலேயே கிட்டத்தட்ட கிடைத்துவிட்டதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.