close
Choose your channels

எதிர்ப்பையும் மீறி கடலூரில் ரிலீஸ் ஆன 'எதற்கும் துணிந்தவன்': ரசிகர்கள் மகிழ்ச்சி!

Thursday, March 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்த ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் இந்த படத்தை கடலூர் மாவட்டத்தில் வெளியிடக்கூடாது என பாமக சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் கடலூர் மாவட்டத்தில் இந்த படம் வெளியாகுமா? என்ற சந்தேகம் ரசிகர் மனதில் ஏற்பட்ட நிலையில் இன்று கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் போலீஸ் பாதுகாப்புடன் ரிலீஸானது.

கடலூர் மாவட்டத்தில் அதிகாலை காட்சிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்றாலும் காலை 7 மணி முதல் போலீஸ் பாதுகாப்புடன் கடலூரில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டதாகவும், ரசிகர்கள் திரையரங்கின் உள்ளே சோதனை செய்யப்பட்டு அனுப்பப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன .

சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதால் சூர்யா மன்னிப்பு கேட்கும் வரை கடலூர் மாவட்டத்தில் ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று பாமக தரப்பிலிருந்து அறிக்கை வெளியிடப்பட்டு இருந்த நிலையில் தகுந்த போலீஸ் பாதுகாப்புடன் ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் ரிலீஸ் ஆனதால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் இந்த படத்தை பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment