close
Choose your channels

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்!

Friday, October 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முடிவடைந்ததாக கூறப்பட்டாலும் இன்னும் இந்த படத்தில் ஒரே ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பு மட்டும் மீதம் இருப்பதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் வெளிவந்துள்ளது.

இந்த பாடலின் படப்பிடிப்பு கால தாமதம் ஆவது ஏன் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்த நிலையில் அதற்காக விடை தற்போது கிடைத்துள்ளது. ’எதற்கும் துணிந்தவன்’ படத்தில் இடம்பெறும் இந்த பாடலில் சூர்யா, பிரியங்கா அருள்மோகன் மட்டுமின்றி பிரபல நட்சத்திரங்களும் இடம்பெற இருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்த டான்ஸ் ரிகர்சல் தற்போது நடைபெற்று வருவதாகவும் தீபாவளி கழித்து இந்த பாடலின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது/ இந்த பாடல் சூர்யா ரசிகர்களுக்கு மட்டுமின்றி மற்ற நட்சத்திரங்களின் ரசிகர்களுக்கும் சர்ப்ரைசாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

சூர்யா ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ள இந்த திரைப்படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார் என்பதும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.