close
Choose your channels

'அயலான்' சிவகார்த்திகேயனை பாராட்டாமல் சூர்யா பாராட்டியது யாரை தெரியுமா?

Friday, January 19, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடித்த ’அயலான்’ திரைப்படம் சமீபத்தில் பொங்கல் விருந்தாக வெளியான நிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் பல திரை உலக பிரபலங்களும் இந்த படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் ’அயலான்’ படத்தில் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பு, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குனர் ரகுமான் ஆகியோர்களை பாராட்டாமல் கிராபிக்ஸ் பணி செய்த Phantom FX விசுவல் எஃபெக்ட்ஸ் குழுவினர்களை நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் பாராட்டியுள்ளார்

Phantom FX விசுவல் எஃபெக்ட்ஸ் குழுவினர்களுக்கு நடிகர் சூர்யா அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், ‘உங்கள் அபார உழைப்பு எங்கள் மனங்களை வென்று விட்டது என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினர்களுக்கு பாராட்டு தெரிவிக்காமல் கிராபிக்ஸ் பணி செய்த நிறுவனத்திற்கு மட்டும் சூர்யா பாராட்டு தெரிவித்துள்ளதாக சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்

மேலும் ‘அயலான்’ படத்திற்கு பணியாற்றிய Phantom FX விசுவல் எஃபெக்ட்ஸ் நிறுவனம் தான் சூர்யா நடித்துவரும் ’கங்குவா’ படத்திற்கும் கிராபிக்ஸ் பணி செய்து வருகிறது என்றும் கூறப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.