அஜித்துக்கு அரசியல் தேவையில்லை: இயக்குனர் சுசீந்திரன்
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
’அஜித்துக்கு அரசியல் தேவை இல்லை’ என இன்று நடைபெற்ற ’வீரபாண்டியபுரம்’ ஆடியோ விழாவில் இயக்குனர் சுசீந்திரன் பேசியுள்ளார்.
இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவான ’வீரபாண்டியபுரம்’ என்ற திரைப்படத்தின் ஆடியோ விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சுசீந்திரன், ஜெய் ,தயாரிப்பாளர் ஐஸ்வர்யா உள்பட அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய சுசீந்திரன், ‘முன்பு அஜித் அரசியலுக்கு வர வேண்டும் என்று நான் சொன்னேன். ஆனால் தற்போது அவர் நல்ல திருப்தியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். எனவே அவருக்கு அரசியல் தேவையில்லை என்று இப்போது கூறுகிறேன்’ என்று கூறினார்.
இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர் ஐஸ்வர்யா கூறியபோது, ‘இந்த படத்தை 35 நாட்களில் எடுத்து தருவதாக இயக்குனர் சுசீந்திரன் வாக்களித்திருந்தார். அதேபோல் சொன்னபடி ஒரு நாள் கூட அது அதிகரிகாமல் 35 நாட்களில் எடுத்துள்ளார். அவருக்கு எனது நன்றிகள். இந்த படம் முழுக்க முழுக்க மதுரை, திண்டுக்கல் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் மிகவும் சிறப்பாக வந்துள்ளது’ என்று கூறினார்.
இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’வீரபாண்டியபுரம்’ திரைப்படம் பிப்ரவரி 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஹீரோவாக ஜெய் நடித்துள்ளதோடு இசையமைப்பாளராகவும் பணி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments