close
Choose your channels

ஏதுமறியா குழந்தைப்போல் உறங்குகிறாள்: தாய் உடல்நலக்குறைவு குறித்து தமிழ் நடிகரின் பதிவு..!

Sunday, March 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் நடிகர் ஒருவரின் தாயார் உடல் நலகுறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் கவிதை வடிவில் தனது வருத்தமான உணர்ச்சிகளை பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ’அது இது எது’ உட்பட ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் நடிகர் ஜெகன். இவர் சூர்யா நடித்த ’அயன்’ உள்பட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் ஜெகனின் தாயார் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஜெகன் மிகவும் வருத்தம் அடைந்து தனது இன்ஸ்டாகிராமில் கண்ணீருடன் கவிதை வடிவில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவு இதோ:

என் தாய்
சேயாகிறாள்

உடல் நலம் குறைந்நு
எங்களை ஈன்றவள்
மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருக்கிறாள்

ஏதுமறியா
குழந்தைப்போல்
உறங்குகிறாள்

எங்களை ஈன்றபோது
எத்தனை இரவுகள்
இப்படிதானே
கவலை தோயத்த
அக்கறையுடன் எங்களை
கவனித்திருப்பாய்.

இந்த ஓர் இரவில்
என் நன்றி கடனை
திரும்ப தர இயலாது
என்பதை எண்ணி
கூனிப்போகிறேன்.

உன் நலம் வேண்டி
என் சிவனை வேண்டுகிறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.