மதுரை வைகையில் கரைபுரண்டோடும் வெள்ளம்.. காரை நிறுத்தி பார்த்து ரசித்த பிரபல நடிகர்!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
மதுரை வைகை ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தை பிரபல நடிகர் ஒருவர் காரை நிறுத்தி பார்த்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருவதாகவும் தென் மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்ததை அடுத்து மதுரை வைகை ஆற்றில் ஏராளமான தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதனை அந்த பகுதியில் உள்ளவர்கள் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
அந்த வகையில் மதுரைக்கார நடிகரான சூரி சமீபத்தில் மதுரை சென்ற நிலையில் மதுரை வைகை ஆற்றின் மேம்பாலத்தில் காரை நிறுத்தி தண்ணீர் புரண்டோடுவதை பார்த்து ரசித்த வீடியோ அவரது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டது. இந்த வீடியோவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ’விடுதலை’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்தப் படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு ஆரம்பத்திலும், அடுத்த ஆண்டு இறுதியில் இரண்டாம் பாகமும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments