close
Choose your channels

போலீஸில் புகார் அளித்த தனுஷ்-சிம்பு பட நாயகி: ஏன் தெரியுமா?

Saturday, June 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தன்னை பற்றி இன்ஸ்டாகிராமில் ஆபாச கருத்து தெரிவித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிம்பு, தனுஷ் பட நடிகை போலிஸில் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிம்பு நடித்த ’குத்து’ தனுஷ் நடித்த ’பொல்லாதவன்’ சூர்யா நடித்த ’வாரணம் ஆயிரம்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா. இவர் நடிகையாக மட்டுமின்றி அரசியல்வாதியாகவும் இருந்து வருகிறார் என்பதும் கர்நாடக மாநிலத்தில் இவர் எம்பியாகவும் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கும் ரம்யா, சமீபத்தில் வெளியான ’சார்லி 777’ என்ற படத்தை பார்த்து தனது கருத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார். இந்த கருத்துக்கு ரசிகர்கள் பலர் வரவேற்பு தெரிவித்த நிலையில் ஒருவர் மட்டும் ரம்யா குறித்து ஆபாசமான கருத்தை வெளியிட்டிருந்தார்.

இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த ரம்யா, சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்து பெங்களூரு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆபாச கருத்து வெளியிட்ட நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.