close
Choose your channels

மார்பகத்தை பெரிதாக்க ஊசி: பகீர் தகவலை வெளியிட்ட 'கபாலி' நாயகி!

Saturday, June 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான ‘கபாலி’ படத்தில் நாயகியாக நடித்த ராதிகா ஆப்தே, தனது மார்பகத்தை பெரிதாக்க ஊசி போட சொல்லி பலர் வலியுறுத்தியதாக பகீர் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற’ பாரன்சிக்’ என்ற வெப்தொடரின் டிரைலர் வெளியியீட்டு விழாவில் நடிகை ராதிகா ஆப்தே கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய ராதிகா ஆப்தே, ‘தான் ஒல்லியாக இருப்பதால் பல்வேறு விதங்களில் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானதாகவும் தன்னுடைய நல விரும்பிகள் தனது உடலில் சில மாற்றங்கள் செய்ய அறுவை சிகிச்சை செய்ய வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த அறிவுரைகள் தன்னை மிகவும் கோபப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.

சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் என்னுடைய உடலிலும் முகத்திலும் அறுவை சிகிச்சை செய்து மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள வலியுறுத்தப்பட்டேன் என்றும், எனது மூக்கை சரிசெய்யவும், மார்பகத்தை பெரிதாக்கவும் ஊசி மற்றும் அறுவை சிகிச்சை செய்ய பலர் அறிவுரை கூறினார்கள் என்றும் அவர் கூறினார்.

ஆனால் நான் அந்த அறிவுரைகளை ஏற்க மறுத்தேன் என்றும் அதனால் எனது திரையுலக வாழ்க்கையில் ஒரு தடை இருந்ததை உணர்ந்தேன் என்றும் ராதிகே ஆப்தே கூறினார். ஆனால் அதே நேரத்தில் நான் என்னுடைய உடலை மிக அதிகமாக நேசிக்கிறேன் என்பதால் எனது உடலில் எந்தவித மாற்றத்தையும் செய்ய நான் விரும்பவில்லை என்றும், என்னுடைய நடிப்புத் திறமைக்கு கிடைக்காத வாய்ப்பு அறுவை சிகிச்சை செய்தால் தான் கிடைக்கும் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் அவர் கூறினார். அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.