close
Choose your channels

இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழ் திரைப்பட ஹீரோ!

Wednesday, March 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரைப்பட ஹீரோக்களில் ஒருவர் தனது இரண்டாவது குழந்தையை எதிர்நோக்கி காத்திருப்பதாக அறிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் ஷங்கர் இயக்கிய ’பாய்ஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் நகுல். அதன்பிறகு காதலில் விழுந்தேன், மாசிலாமணி, கந்தகோட்டம், உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு சுருதி பாஸ்கர் என்பவரை திருமணம் செய்து கொண்ட நகுலுக்கு அகிரா என்ற பெண் குழந்தை 2020 ஆம் ஆண்டு பிறந்தது. இந்தநிலையில் தற்போது மீண்டும் தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக நகுல் அறிவித்துள்ளார். இது குறித்த புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதனையடுத்து ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது நடிகர் நகுல், ‘எரியும் கண்ணாடி’ மற்றும் ’வாஸ்கோடகாமா’ ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அந்த படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.