close
Choose your channels

சட்டசபையில் பாராட்டிய தமிழக முதல்வர் ஸ்டாலின்.....!கண்கலங்கிய அமைச்சர்......!

Tuesday, August 24, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com


திமுக கட்சியை சிறப்பாக வழிநடத்தவும், ஆட்சியை சீராக செய்யவும் எனக்கு உறுதுணையாக இருப்பவர் அமைச்சர் துரைமுருகன், என முதல்வர் முக.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சட்டமன்றத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களின், துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவாதம் துவங்கும் முதல்வர் முக.ஸ்டாலின் கூறியிருப்பதாவது,

"மாண்புமிகு அமைச்சர் துரைமுருகன் அவர்கள் எந்த துறை கொடுப்பினும், அதில் சிறப்பாக பணியாற்றுவார்.


மூத்த கழக தலைவர்கள் கலைஞர் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் அவர்களின் மறைவிற்குப்பின், இந்த மாபெரும் கட்சியில் நான் சிறப்பாக பணியாற்றுவதற்கு உறுதுணையாக இருப்பது அண்ணன் துரைமுருகன் அவர்கள் தான். இந்த சட்டசபையை அவர் நினைத்தால் உணர்வசப் படவைப்பார், இக்கூட்டத்தை அழ வைக்கவோ, சிரிக்க வைக்கவோ நினைத்தால் அதையும் செய்துவிடுவார். அமைதி இருங்க அண்ணே, எனக்கூறினால் அதையும் மறுக்காமல் கேட்பார். இப்படிப்பட்ட அமைச்சர் கிடைத்திருப்பது கழகத்திற்கும் , கழக அரசிற்கும் சேர்ந்த பெருமை"


என்று பாராட்டினார். அந்த சமயத்தில் அமைச்சர் துரைமுருகன் அவர்கள் கண்கலங்கினார். முதல்வர் ஸ்டாலின் கூறிய தீர்மானத்தில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஓ.பன்னீர்செல்வம், நயினார் நாகேந்திரன் ஆகியோரும் இதுகுறித்து பேசியுள்ளனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos