close
Choose your channels

மண்ணின் மைந்தன் நடராஜனுக்கு வாழ்த்துக்கள்: முதல்வர் பழனிசாமி டுவீட்

Wednesday, December 2, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.

இன்றைய போட்டியில் முதல் முதலாக சர்வதேச போட்டியில் விளையாடிய சேலத்தை சேர்ந்த நடராஜன் அபாரமாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் சர்வதேச போட்டியிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்திய நடராஜனுக்கு தமிழகத்தில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அரசியல் தலைவர்கள் திரையுலக பிரபலங்கள் உள்பட பலர் தங்களது சமூக வலைதளங்களில் நடராஜனுக்கு பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் நடராஜனுக்கு தனது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து தனது டுவிட்டரில், ‘இந்தியாவிற்கான தன் முதல் போட்டியிலேயே, சவால்கள் நிறைந்த சூழ்நிலையிலும் தன் முத்திரையைப் பதித்து, தன் சர்வதேசப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியிருக்கும் நம் மண்ணின் மைந்தன் நடராஜனுக்கு வெற்றிகள் மென்மேலும் வந்து சேர வாழ்த்துகிறேன்’ என்று கூறியுள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.