close
Choose your channels

பள்ளி, கல்லூரிகள் திறப்பு… முக்கிய அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசு!

Monday, August 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் அனைத்துப் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை சமீபகாலமாக குறைந்து வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் ஊரடங்கு விதிமுறைகளில் பல தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அந்த வகையில் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்பு தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் தமிழகத்தில் ஏற்கனவே அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் பல தளர்வுகளுடன் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் துவக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.

இதையடுத்து வரும் செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் 9,10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் சுழற்சி முறையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் செயல்படும் என்று ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை செய்தி வெளியிட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.