நாங்கள் பொங்கினால் தமிழகம் தாங்காது: தமிழிசை பொங்கியது ஏன்?

  • IndiaGlitz, [Wednesday,March 21 2018]

தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் பொதுவாக செய்தியாளர்களிடம் பேசும்போது அமைதியாக பேசுவார். ஆனால் இன்று நாங்கள் பொங்கினால் தமிழகம் தாங்காது என்று அவரே  பொங்கி பேசியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

வி.எச்.பியின் ரத யாத்திரைக்கு திமுக உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்பு, மார்ச் 7ஆம் தேதியன்று கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது மற்றும்  நேற்றிரவு மீண்டும் பாஜக மாவட்ட தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது ஆகியவைகளுக்கு கண்டனம் தெரிவித்த தமிழிசை, இதுவே பாஜகவினர் மீதான கடைசி தாக்குதலாக இருக்க வேண்டும் என்றும், இனிமேலும் பொறுத்து கொள்ள முடியாது என்றும் நாங்கள் பொங்கி எழுந்தால் தமிழகம் தாங்காது என்றும் ஆவேசமாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்து கடவுள்களான ராமர், சீதையின் ரதம் தமிழகத்திற்குள் வரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சியினர்களுக்கு இந்துக்கள் வாக்களிக்க கூடாது என்ற முடிவை எடுக்க வேண்டும் என்றும், பெரியார் பிறந்தது பெரிதா? அல்லது நாயன்மார்கள் ஆழ்வார்கள் பிறந்தது பெரிதா என்று வரும் காலத்தில் பார்ப்போம் என்றும் தமிழிசை கூறியுள்ளார்.

More News

கமல்ஹாசனின் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை: கவுதம் மேனன்

கமல்ஹாசன் அரசியலில் ஈடுபடுவது குறித்து என்னால் எதுவும் கூற முடியாது. அது அவருடைய உரிமை. ஆனால் நான் அவரிடம் இருந்து நல்ல திரைப்படங்களை விரும்புகிறேன்

அதிமுக கொடிக்கம்பத்தில் பாஜக கொடி! அதிர்ச்சியில் தொண்டர்கள்

திண்டுக்கல் அருகே உள்ள அதிமுக கொடிக்கம்பத்தில் அதிமுக கொடிக்கு பதிலாக பாஜக கொடி பறந்ததால் அந்த பகுதியில் உள்ள அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது ஆண்டவன் கொடுத்த வாய்ப்பு: ரஜினி வெளியிட்ட வீடியோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று இமயமலையில் இருந்து சென்னை திரும்பினார் என்பதும் அதன்பின்னர் அளித்த பேட்டியில் தனக்கு பின்னால் ஆண்டவனை தவிர யாரும் இல்லை என்று கூறியதையும் பார்த்தோம்

பாவம் அஜித்-விஜய்: கூறியது யார் தெரியுமா?

நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 62 படத்திற்கு மட்டும் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்த அனுமதித்தது குறித்து நடிகர் சித்தார்த் கூறிய கருத்தை சற்றுமுன் பார்த்தோம்.

'இருட்டு அறைக்கு' கிடைத்த எதிர்பார்த்த சென்சார் சான்றிதழ்

'ஹர ஹர மகாதேவி' படத்தை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமாரின் அடுத்த படமான 'இருட்டு அறையில் முரட்டு குத்து' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் சமீபத்தில் முடிந்தது