சிவாவின் 'தமிழ்ப்படம் 2' சென்சார் தகவல்

  • IndiaGlitz, [Tuesday,July 03 2018]

கடந்த சில வாரங்களாகவே இணையதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் திரைப்படம் 'தமிழ்ப்படம் 2'. இந்த படத்தின் விளம்பரங்கள், டீசர், டிரைலர் ஆகியவற்றில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல் உள்ளூர் அரசியல்வாதிகள் வரையும், கமல், ரஜினி, அஜித், விஜய் உள்பட அனைத்து முன்னணி நடிகர்களும் கலாய்க்கப்பட்டு வருகின்றனர். இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தை நேற்று மாலை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு 'யூ' சான்றிதழ் அளித்துள்ளனர். இதனையடுத்து இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. அனேகமாக ஜுலை 12 அல்லது 13ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவா, திஷா பாண்டே, சதீஷ், சந்தானபாரதி, ஐஸ்வர்யா மேனன், நிழல்கள் ரவி, மனோபாலா, கஸ்தூரி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு கண்ணன் இசையமைத்துள்ளார், கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் சுரேஷ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தை 'தமிழ்ப்படம்' முதல் பாகத்தை இயக்கியுள்ள சி.எஸ்.அமுதன் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

கைகொடுக்காத கட்டிப்பிடி வைத்தியம்: செண்ட்ராயன் பரிதாபம்

பிக்பாஸ் வீட்டின் தலைமை பொறுப்பு நேற்றுடன் நித்யாவுக்கு முடிவுக்கு வந்தது. இதுகுறித்த அறிவிப்பு வந்தவுடன் நித்யா மிகுந்த சந்தோஷம் அடைந்தார்

பேப்பர் படித்து கொண்டே பஸ் ஓட்டும் சென்னை மாநகர பேருந்து டிரைவர்

சென்னையை சேர்ந்த மாநகர் பேருந்தை ஓட்டும் டிரைவர் ஒரு செய்தித்தாளை படித்து கொண்டே பேருந்தை ஓட்டிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சூர்யாவின் அடுத்த படத்தில் ஆர்யா?

'என்.ஜி.கே' படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் முடித்த நடிகர் சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.

அரைநிர்வாண படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய 'பாலா' நாயகி

இயக்குனர் பாலா இயக்கிய 'அவன் இவன்' படத்தின் நாயகிகளில் ஒருவர் மதுஷாலினி. இவர் இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் தற்கொலை: காரணம் என்ன?

டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.