ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் சூப்பர் ஹிட் பட நாயகி!

  • IndiaGlitz, [Wednesday,July 31 2019]

'பியார் பிரேமா காதல்', 'இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்' ஆகிய படங்களை அடுத்து பிக்பாஸ் புகழ் ஹரீஸ் கல்யாண் தற்போது நடித்து வரும் படம் 'தாராள பிரபு. விந்துதானம் குறித்த விழிப்புணர்ச்சியை கொண்ட கதையம்சம் கொண்ட இந்த படம் பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான 'விக்கி டோனர்' என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்பதும், இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் கிருஷ்ணா மாரிமுத்து என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே

இந்நிலையில் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக நடிக்க தான்யா ஹோப் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இவர் சமீபத்தில் வெளியான அருண்விஜயின் சூப்பர் ஹிட் படமான 'தடம்' படத்தின் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விந்து தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் மருத்துவர் வேடத்தில் நடிகர் விவேக் நடிக்க உள்ளார்

தற்போது ஹரிஷ் கல்யாண், 'தனுசு ராசி நேயர்களே' என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் சசி இயக்கவுள்ள ஒரு படத்திலும் அவர் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

அஜித் படத்தின் ரிலீசுக்கு மறுநாள் உதயநிதி ரிலீஸ் செய்யும் படம்!

அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் விக்ராந்த் நடித்த 'பக்ரீத் என்ற படத்தை ஆகஸ்ட் 9 ஆம் தேதி ரிலீஸ் செய்ய உதயநிதி ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார் 

மோகன்லால் இயக்கும் முதல் படத்தில் ஹாலிவுட் நட்சத்திரங்கள்

பிரபல நடிகர் மோகன்லால் மலையாலத்தில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு திரையுலகிலும் பிரபலமானவர். கடந்த 40 ஆண்டுகளாக தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக

கவினுக்கு வந்த மொட்டை கடிதங்கள்: சாக்சி கண்ணீர்

பிக்பாஸ் வீட்டில் மீராமிதுன், வனிதா ஆகிய இரண்டு சர்ச்சைக்குரிய போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் ஓரளவிற்கு போட்டியாளர்கள் அமைதியாக உள்ளனர்.

சன்னிலியோனால் என் நிம்மதியே போச்சு: போலீசில் புகார் அளித்த இளைஞர்

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோனால் தனது வாழ்க்கையின் நிம்மதியே போய்விட்டதாக டெல்லி போலீசார்களிடம் இளைஞர் ஒருவர் புகார் அளித்துள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கத்திக்குத்தில் முடிந்த அஜித்-விஜய் ரசிகர்களின் சண்டை

அஜித், விஜய் ரசிகர்களிடையே சமூக வலைத்தளங்களில் சண்டை நடப்பது என்பது அன்றாட நிகழ்வுகளில் ஒன்று. இருதரப்பினர்களும் சண்டை போடாத நாளே இல்லை