close
Choose your channels

அஜித் படத்தின் ரிலீசுக்கு மறுநாள் உதயநிதி ரிலீஸ் செய்யும் படம்!

Wednesday, July 31, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் விக்ராந்த் நடித்த 'பக்ரீத் என்ற படத்தை ஆகஸ்ட் 9 ஆம் தேதி ரிலீஸ் செய்ய உதயநிதி ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்

விக்ராந்த் நடிப்பில் ஜெகதீசன்சுபு இயக்கிய 'பக்ரீத்' திரைப்படம் கடந்த மாதமே ரிலீசுக்கு தயாராக இருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் பெற்றுள்ளது

இதனையடுத்து இந்த படம் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாகும் என உதயநிதி அறிவித்துள்ளார். அஜித் படத்திற்கு பெரும்பாலான திரையரங்குகள் கைப்பற்றப்படும் நிலையிலும் உதயநிதி தைரியமாக இந்த படத்தை ரிலீஸ் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக அஜித்தின் 'நேர் கொண்ட பார்வை' திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை கைப்பற்ற உதயநிதி முயற்சித்ததாகவும், ஆனால் அந்த படத்தின் உரிமையை ஜெமினி நிறுவனம் பெற்றுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தது.

விக்ராந்த், வசுந்தரா காஷ்யப் உள்பட பலர் நடித்துள்ள 'பக்ரீத்' படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஒட்டகம் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.