close
Choose your channels

சன்னிலியோனால் என் நிம்மதியே போச்சு: போலீசில் புகார் அளித்த இளைஞர்

Wednesday, July 31, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோனால் தனது வாழ்க்கையின் நிம்மதியே போய்விட்டதாக டெல்லி போலீசார்களிடம் இளைஞர் ஒருவர் புகார் அளித்துள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சன்னிலியோன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'அர்ஜூன் பாட்டியாலா'. இந்த படத்தில் சன்னிலியோன் கேரக்டர் மற்றொரு கேரக்டரிடம் ஒரு மொபைல் எண்ணை தரும் காட்சி உள்ளது. இந்த மொபைல் எண்ணை சன்னிலியோனின் மொபைல் எண் என தவறாக நினைத்து கொண்ட அவரது ரசிகர்கள் அந்த எண்ணுக்கு தினமும் தொடர்பு கொண்டு, தான் சன்னிலியோனிடம் பேச வேண்டும் என்று நச்சரிக்கின்றார்களாம்

இதனால் கடும் அதிருப்தி அடைந்த இந்த மொபைல் எண்ணுக்கு சொந்தக்காரரான புனித் அகர்வால் என்ற டெல்லியை சேர்ந்த இளைஞர் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது மொபைல் எண்ணுக்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் போன் செய்து சன்னிலியோன் குறித்து தன்னிடம் கேட்பதாகவும், இதனால் தனது நிம்மதியே பறிபோய்விட்டதாகவும் இதனையடுத்து 'அர்ஜூன் பாட்டியாலா' படக்குழுவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது புகார் மனுவில் அவர் தெரிவித்துள்ளார். போலீசார் இதுகுறித்து கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

'அர்ஜூன் பாட்டியாலா' படத்தின் இயக்குனர் ரோஹித் ஜூஹ்ராஜ் அவர்களிடம் இதுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டதாகவும் விரைவில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.