அவர்களெல்லாம் அஜித்தின் காலைக் கழுவி வணங்க வேண்டும்: பிரபல நடிகை

  • IndiaGlitz, [Wednesday,August 29 2018]

தல அஜித் என்றாலே அனைவருக்கும் பிடிக்க ஒரு முக்கிய காரணம் அவரது மனிதநேயம், உதவி செய்யும் குணம் மற்றும் எளிமை என்பது அனைவரும் அறிந்ததே. அஜித்தின் நடிப்பை பிடிக்காதவர்களுக்கு கூட அவருடைய குணம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். எனவேதான் அவர் அனைத்து தரப்பினர்களுக்கும் பிரியமானவராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் 'விஸ்வாசம்' படப்பிடிப்பின்போது பிரபல தெலுங்கு நடிகை மீனா வாசு என்பவர் அஜித்தை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டார். பின்னர் சமூக வலைத்தளத்தில் இந்த சந்திப்பு குறித்து மீனா வாசு கூறியபோது, 'இது ஒரு ரசிகையின் இனிமையான தருணம். அஜித்தை போன்று ஒரு எளிமையான மனிதரை நான் என் வாழ்நாளில் நான் பார்த்தததே இல்லை. என்ன ஒரு எளிமையான, இனிமையான மனிதர்.

ஒரே ஒரு ஹிட் படம் கொடுத்த பின்னர் அதிகபட்சமாக பில்டப் செய்யும் பல நடிகர்களை நான் பார்த்துள்ளேன். ஆனால் இத்தனை வெற்றிகள் கொடுத்தும் இவரால் எப்படி எளிமையாக இருக்க முடிகிறது. ஈகோ என்கிற நாய் பின்னால் சென்றால் வெற்றி நிலைக்காது. அந்த மாதிரி ஈகோ பிடித்தவர்கள் அஜித்தின் காலைக் கழுவி, தொட்டு வணங்கினால், அவரது உயர்ந்த குணத்தில் 10 சதவிதமாவது வரும் என்று மீனா வாசு குறிப்பிட்டுள்ளார்.

மீனா வாசுவின் இந்த ஒரே ஒரு பதிவால் அவர் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆனது மட்டுமின்றி அவரது ஃபாலோயர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் மிக அதிகமாக அதிகரித்துள்ளது.

 

More News

மகள் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்ட அம்மா: பாலாஜி நெகிழ்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு மாதங்களாக ரணகளமாக இருந்த நிலையில் இந்த வாரம் முழுவதும் செண்டிமெண்ட் நிரம்பி வழிகிறது. குறிப்பாக பிக்பாஸ் போட்டியாளர்களின் வீடுகளில்

கார் விபத்தில் பிரபல நடிகரின் தந்தை மரணம்

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமாராவின் மகனும், பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையுமான ஹரிகிருஷ்ணா

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த்  வாழ்த்து

திமுக தலைவராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலினுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தொலைபேசியில் தெரிவித்துள்ளார். 

பத்மநாப சுவாமி கோவிலின் ரூ.1 லட்சம் கோடி பொக்கிஷங்கள் நிவாரணத்திற்கு பயன்படுத்தப்படுமா?

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் சுமார் ரூ.1 லட்சம் கோடி அளவில் தங்க பொக்கிஷங்கள் இருப்பதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தது

இந்துக்கள் குறித்து சர்ச்சை கருத்து: பிரகாஷ் மீது கிரிமினல் வழக்கா?

இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.